Tag: தமிழ் ஆர்வமூட்டும் கதைகள்

29

Sep2022
ஈழத்தமிழ் எழுத்தாளரும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவா 28-1-2021 அன்று தன் 94 ஆவது அகவையில் மறைந்தார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். முற்போக்கு இலக்கியத்திற்காக மல்லிகை என்னும் மாத இதழை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார். ஈழ இலக்கியத்தின் பல குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மல்லிகையில் வெளியாகியிருக்கின்றன. பல ஆண்டுகள் மல்லிகை எனக்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது. நான் வாசிக்கநேர்ந்தபோது அதன் பொற்காலம் முடிவுற்றுவிட்டிருந்தது. பெரும்பாலும் ... Read More
September 29, 2022Admin

23

Sep2022
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்,குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கும் விதிகள்,1956-ஆம் ஆண்டின் பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் (The Immoiral Traffic (Prevention) Act 1956),திருமணமான மகளிரின் சொத்துச் சட்டம் 1874 (The Married Women's Property Act, 1874),மகளிர் தம்மை இழிவுபடுத்திக்காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், 1986 [The Indecent Representation of Women (Prohibition) Act, 1986]குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மகளிர் ... Read More
September 23, 2022Admin

22

Sep2022
ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.... Read More
September 22, 2022Admin

21

Sep2022
ஏன் ஒரே ஒரு ஐன்ஸ்டீன், ஒரே ஒரு ஆபிரகாம் லிங்கன், ஒரே ஒரு பில் கேட்ஸ் மட்டும் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஏன் அலெக்சாண்டரைப் போல் இன்னொரு மாவீரன் பிறக்கவில்லை? ஏன் இன்னொரு காந்தியைக் காண-முடிவதில்லை? ஏன் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகவேயில்லை? நம்மைப் போன்ற சாமானியர்களால் எப்படி அவர்களைப் போல் மாற-முடியும்? நோ சான்ஸ்! ... Read More
September 21, 2022Admin

20

Sep2022
70 களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய். வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போரட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மதரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்க முடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது ... Read More
September 20, 2022Admin

14

Sep2022
வீட்டுக் கணக்கையே பார்த்துக்கொண்டிருந்த நீங்கள் கொஞ்சம் நாட்டின் கணக்கையும் பார்க்க உதவும் புத்தகம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய , நாட்டின் பொருளாதாரம் தொடர்பான அத்தனை முக்கிய விபரங்களையும் எளிமையாக சொல்லி வியப்பை ஏற்படுத்தும் புத்தகம். அஞ்சுமன் அறிவகம்... Read More
September 14, 2022Admin

13

Sep2022
சந்திராவின் கதைகள் பால்யத்தின் நினைவோடைகள் பெருகும் கனவுகளால் ஆனவை. தான் நீங்கிவந்த மண்னின் - மனிதர்களின் வாசனைகள், காட்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை. அஞ்சுமன் அறிவகம்
September 13, 2022Admin

11

Sep2022
லிபய சர்வாதிகாரி முசோலினியின் சர்வ வல்லமைமிக்க படையை எதிர்த்த முதியவரின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு… அடக்குமுறைக்கு எதிராக களம் காணும் போராளிகளுக்கு நாடு, மதம், இனம் கடந்து ஆதர்சமாக இப்போதும் திகழ்கிறார் உமர்முக்தார்… தூக்கிலிடப்பட்ட அவரின் போராட்டப் பாதையை, எழில் மிகு நடையில் நெஞ்சில் நிறுத்துகிறார் நாவலர் ஏ.எம். யூசுப். அஞ்சுமன் அறிவகம்... Read More
September 11, 2022Admin

10

Sep2022

மரம்

0  
ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்ல என்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன. அஞ்சுமன் அறிவகம்... Read More
September 10, 2022Admin

07

Sep2022
வத்ஸலாவின் நாவல் வெறும் அம்மா-மகள் கதை மட்டுமல்ல. ஏராளமான இதர பாத்திரங்கள் ஆசிரியையுடைய அகன்ற சொல்லோவியத்தில் அவரவர்களுடைய பங்கைப் பெறுகிறார்கள். பொதுவாக சுயநலம் என்ற குணம் இந்த நாவலின் பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுகிறது. தொடக்கத்தில் வரும் சொற்களும் சிந்தனைகளும் இறுதியிலும் வந்து வட்டத்தைப் பூர்த்தி செய்கின்றன. அசோகமித்திரன் அஞ்சுமன் அறிவகம்... Read More
September 7, 2022Admin