Category: Arivom Ayiram

Arivom Ayiram

19

Aug2022
*நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான். வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் ... Read More
August 19, 2022Admin

18

Aug2022
*நவீன இலக்கியம், சினிமா, பண்பாடு, கலாசாரம் பற்றிய தனது கருத்துகளை அப்பட்டமாக விமரிசித்து எழுதி வருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. தான் பார்த்த விஷயங்களை, வெளிநாட்டுச் சம்பவங்களை, திரைப்படத் தாக்கங்களை, எதார்த்த நிகழ்வுகளை தன் அனுபவங்களோடு கலந்து எழுதுவதில் வல்லவர். அந்த வகையில், ‘மனம் கொத்திப் பறவை’ எனும் தலைப்பில் ஆனந்த விகடன் இதழ்களில் அழகாகவும், மிகுந்த ரசனையோடும் எழுதி, வாசகர்களின் மனதில் புகுந்து நிரந்தரமாக வாசம் ... Read More
August 18, 2022Admin

16

Aug2022
ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தேடுகிறது. அஞ்சுமன் அறிவகம்... Read More
August 16, 2022Admin

14

Aug2022
பொதுவாழ்வில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கும் அ. மார்க்ஸ் தனது வாழ்வின் அழியாத நினைவுகளை இந்த நூலில் காட்சிப்படுத்துகிறார். தான் கடந்து சென்ற, தன்னைக் கடந்து சென்ற மனிதர்களின் வழியே மார்க்ஸ் தனது வாழ்வின் உணர்வுபூர்வமான சித்திரங்களைத் தீட்டுகிறார். இந்த நினைவுக் குறிப்புகள் மார்க்ஸின் தீவிரமான சமூகப் பார்வைகளின் வழியே உருக்கொள்கின்றன. காதலர் தின நினைவுகள், அப்பர் வளர்த்த நாய்கள், சினிமா…சினிமா… கரிச்சான்குஞ்சு, ஜெயகாந்தன்: சில நினைவுகள், ... Read More
August 14, 2022Admin

13

Aug2022

மழைமான்

0  
மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் தனக்கென தனித்துவமான ஒரு எழுத்து முறையை உருவாக்கிக்கொண்ட அரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது என்பதை அடையாளம் காட்டுகின்றன. நாம் வீழ்ச்சியின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது. இந்த அவலத்தையே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. கதை சொல்லும் முறையில் ... Read More
August 13, 2022Admin

12

Aug2022
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும் (வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும் (மார்க்கம்), வாத்துராமனும் (கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும் (அப்பா), நடிகர் பரமேஷூம் (சிரித்தாலும் கண்ணீர் வரும்), டைகர் ... Read More
August 12, 2022Admin

11

Aug2022
ஷாட் ஹெல்ம்செட்டரின் எளிமையான ஆனால் ஆழமான நுட்பங்கள், மனித மூளையின் செயல்முறைகளைப் பற்றிய புரிதலின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவியது. புதிய வழிகளில் உங்களுடன் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் வியத்தகு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீங்கள் நன்றாக உணருவீர்கள், மேலும் சாதிப்பீர்கள். இது வேலையிலும் வீட்டிலும் அதிகமாகச் சாதிக்கவும், உடல் எடையைக் ... Read More
August 11, 2022Admin

10

Aug2022
கனமான நூல்களை நுனிப்புல் மேயாது, ஆழமாக கற்றுணர்ந்து சுயமாக அவற்றைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் உடைய வெகு சிலர்களிலே மீ.ராஜு ஒருவர். இது மார்க்ஸியம் அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இத்தொகுப்பில் காணும் கட்டுரைகளின் பரந்துப்பட்ட கருத்தாட்சியைப் பார்த்தாலே, ராஜுவின் படிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். அவருடைய முதல் நூலே ராஜுவின் சிந்தனை ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அவருடைய நடையில் தெளிவு இருக்கிறது. இயல்பான ... Read More
August 10, 2022Admin

09

Aug2022

வெகுளி

0  
உலகத்தைப் புரிந்துகொள்ள முயலாமல் தன்போக்கில் ஆத்ம தரிசனத்தோடு ஆழமாக அன்பு செலுத்தவும், முற்றாக நேசிக்கவும் விரும்பும் அப்பழுக்கற்ற ஒரு மனிதனை இவ்வுலகம் எவ்விதமாக வெல்லாம் கேலி செய்கிறது என்பதோடு அவற்ரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பயணிக்கும் பழிபாவமற்ற ஒரு மனிதனின் கதையே இந்நாவல். பொய்மையும், பகைமையும், போலிமையும், அற்பத் தந்திரங்களும் மேலோங்கிய ரஷ்ய நாட்டு உயர்குடிச் சமூகத்தின் மீதான புகார்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கும் இந்நாவல், வாழ்வின் நிதர்சனமான ... Read More
August 9, 2022Admin

08

Aug2022
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் இயல்பை ஆராய்வதோடு, நவீன நாகரிகம் பற்றியே அடிப்படையான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது.. அஞ்சுமன் அறிவகம்... Read More
August 8, 2022Admin