முத்தும் பவளமும் (அல்லுவுலுவு வல்மர்ஜான்)

முத்தும் பவளமும் (அல்லுவுலுவு வல்மர்ஜான்)

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்    : முத்தும் பவளமும் (அல்லுவுலுவு வல்மர்ஜான்)
ஆசிரியர்         : முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ
தமிழ் மூலம் : நூ.அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.பில்.,
பதிப்பகம்       : சாஜிதா புக் சென்டர்
நூல் பிரிவு    : IH-02

நூல் அறிமுகம்

இருபெரும் இமாம்களான முஹம்மது பின் இஸ்மாயீல் அல்புகாரீ, முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா) ஆகியோர் செவ்வனே தொகுத்தளித்த ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் பெயர் பெற்றவையாகும்.

இவ்விரண்டு நூல்களுள் தொகுக்கப்பெற்றுள்ள நபிகளாரின் பொன்மொழிகள் யாவும் முற்றிலும் சரியானவை என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அத்தகைய சிறப்பையும் நம்பகத்தன்யையும் ஒருங்கே பெற்ற இவ்விரண்டு தொகுப்பினுள், புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இணைந்து ஒருசேரத் தொகுத்துள்ள ஒரே கருத்துடைய பொன்மொழிகளை மட்டும் தேடிக் கண்டுபிடித்துக் கோர்வை செய்துள்ளார் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்.

இத்தகைய சிறந்த நபிமொழி நூலை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.


அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Hadees

Share the Post

About the Author

Comments

Comments are closed.