Category: About us

31

Aug2022
இக்கட்டுரைகள் சுதந்திரவாத நோக்கு அ.ராவை கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன. வெவ்வேறு இலக்கிய சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குரூஸின் கொற்கையை தடைசெய்ய வேண்டுமென எழுந்த கோரிக்கையை, புதுமைப்பித்தனின் நாசகார கும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். பெருமாள் முருகனின் நாவலைத் டைசெய்யக்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த னுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். லக்கிய விவாதங்களில் அ.ராவின் ... Read More
August 31, 2022Admin

30

Aug2022
எஸ்.ரா வின் புதிய நாவலான 'சஞ்சாரம்' குறித்து ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.நாதஸ்வரக் கலைஞர்கள் எங்கே இசையைக் கற்றுக்கொள்கிறார்கள், எங்கே நாதஸ்வரம் தயாரிக்கிறார்கள், கல் நாயனம் என்றால் என்ன, எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் வாசிக்கிறார்கள், ஒவ்வொரு நாதஸ்வர வித்துவான்களின் இசைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயல்வது, நையாண்டி மேளம் வாசிப்பவர்களைச் சந்திப்பது என்று ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து அதைப் பற்றியே தேடிக்கொண்டே ... Read More
August 30, 2022Admin

29

Aug2022
தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப் புள்ளியிலிருந்து விலகி அனுபவங்களின் குழம்பிய வண்ணங்களைக் காட்சிப் படுத்துகின்றன. அஞ்சுமன் அறிவகம்... Read More
August 29, 2022Admin

28

Aug2022
அமெரிக்கக் குழந்தைகளுக்கான மருந்துகளை மேம்படுத்தும் வகையில், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ... Read More
August 28, 2022Admin

27

Aug2022
இந்த புத்தகத்தில் உங்கள் வெற்றிக்கு உதவும் 5 சூத்திரங்களைப் பற்றி நீங்கள் படிப்பீர்கள், ஆனால் வெற்றி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் வெற்றி என்பது இந்த 5 சூத்திரங்களின் கலவையாகும், உங்கள் வாழ்க்கையில் இந்த 5 சூத்திரங்கள் இருந்தால் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அஞ்சுமன் அறிவகம்... Read More
August 27, 2022Admin

26

Aug2022
கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன. அஞ்சுமன் அறிவகம்
August 26, 2022Admin

24

Aug2022
பாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் தண்ணீரில் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் முதலை மேலே துரத்தி வந்த புலி உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு. ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்பு தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம். என்ன தவறு? இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதா? மனிதனின் சபல புத்தியைதான் பார்க்கணுமா! அஞ்சுமன் அறிவகம்... Read More
August 24, 2022Admin

23

Aug2022
ஒரு சிறு கதையோ என்று மயங்குமளவு இச்சம்பவங்களுடன் நடை பயிலும் எழுத்துக்களின் அழகு, யதார்த்தத்தின் அவலங்களா கற்பனையா என்ற மருட்சிக்குள் எம்மை ஒரு கணம் இட்டுச் செல்வது உண்மை, ஆனால், இவை கற்பனைகள் அல்ல; கற்பனையையும் தோற்கடிக்கும். இரத்தத்தை உறைய வைக்கும் ... Read More
August 23, 2022Admin

22

Aug2022
*இந்திய ஜனநாயக அமைப்பில் அரசியல் சூதாடிகளின் வழிமுறைகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் சித்தரிக்கிறது. அதிகார வேட்கைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் குற்ற நிழல்கள் எவ்வாறு திரும்பத் திரும்ப நமது சமகால அரசியல் சரித்திரமாக மாறுகிறது என்பதை சுஜாதா இந்த நாவலில் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் சித்தரிக்கும் பல சம்பவங்கள் பலமுறை நமது நாட்டின் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன என்பதுதான் மிகவும் வினோதம்.... Read More
August 22, 2022Admin

21

Aug2022

உறுபசி

0  
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனிதப் ... Read More
August 21, 2022Admin