இந்திய திருநாட்டின்
76 ஆவது குடியரசு தினம் அஞ்சுமன் அறிவகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது ராஜகிரி தாவூது பாட்சா அறிவியல் கலைக் கல்லூரி நிறுவனர் தாளாளர் கல்விமான் அல்ஹாஜ் தாவூது பாஷா சாஹிப் அவர்கள் மாணவர்கள் அணி வகுப்பை ஏற்று தேசியக்கொடியினை ஏற்றி வைத்து ஏற்புரை நிகழ்த்தினார்கள்
சிறப்பு விருந்தினராக வருகை தந்த சிங்கப்பூர் செம்மொழி தமிழ் மாத இதழ் ஆசிரியர் முஹம்மது இலியாஸ் அவர்களுக்கும் பட்டயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது அறிவக நிறுவனர் அல்ஹாஜ் D.M ஜபருல்லாஹ்
அவர்கள் அல்ஹாஜ் தாவூத் பாஷா அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவித்தார்கள்
தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் முழங்க நடந்த நிகழ்வில் ஜமாத் தலைவர் சிம்லா நஜீப் வாழ்த்துரை வழங்கினார் ஜமாத் சபை செயலாளர் பட்டாணி S.P.J இலியாஸ் செம்மொழி மாத இதழ் ஆசிரியர் முகமது இலியாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் துளசி ஐயா ஒன்றிய செயலாளர் என் நாசர்
மாவட்ட பிரதிநிதி S..P.J முபாரக் மற்றும் வல்லத்தார் பாஷா ஜான் O.P.பசீர் உள்ளிட்டோர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்
நிகழ்ச்சியினை சொல்லரசு வாலன் சுலைமான் தொகுத்து ஒருங்கிணைப்பு செய்தார்கள். அப்துர் ரஹ்மான் அத்தாயி அவர்களின் சிறப்பு துவாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது