Gallery / Events

75 வது குடியரசு தின விழா 26-01-2024

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழா *அஞ்சுமன் அறிவக நிறுவனர் அல்ஹாஜ் கொக்கரட்டி D.M.ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையில், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி ஜமாத் சபை தலைவர்களான ஹாஜி P.A.சிம்லா நஜீப் அவர்கள் மற்றும் ஹாஜி J.வாலன் அக்பர் பாட்சா அவர்களும் மேலும் செயலாளர்களான S.P.J.இல்யாஸ் அவர்கள் மற்றும் ஆலியார் A.R.M. ஆரிஃப் அவர்களும் இந்நிகழ்வில் தனது பங்களிப்பினை சிறப்பாக வழங்கினார்கள். மேலும் ஜமாஅத் சபை நிர்வாகிகள், உலமா பெருமக்கள் ஜமாத்தார்கள் மற்றும் அஞ்சுமன் அறிவக அறங்காவலர்கள் O.P.பஷீர் அஹமத், S.P.J.முபாரக், வல்லம் பாஷாஜான், அய்யம்பேட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் T.P.T. துளசி அய்யா, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா, பாவை ஒன்றிய கழக செயலாளர் N. நாசர், இந்திய தேசிய காங்கிரஸ் பேரூர் தலைவர் பசீர் அஹமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் ராஜாஜி, பாபநாசம் சட்டமன்ற அலுவலக அலுவலர் ரிபாயி ஆகியோர் முன்னிலை வகிக்க சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வினை அறிவக அறங்காவலர் பரிசுக்கார தம்பிதுரை அவர்கள் தொகுத்து வழங்க, அறிவக அறங்காவலர் வாலன் சுலைமான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், சிறப்பு விருந்தினர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் MBA, M.Phil., PhD., M.L.A., அவர்கள் நம் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உறுதிமொழியை வாசித்து சிறப்புரையாற்றினார்கள். *அறிவக நிறுவனர் அல்ஹாஜ் D.M.ஜபருல்லாஹ் அவர்கள் நமது சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பேழை வழங்கி கௌரவித்தார்கள்*, .. கிராஅத், தமிழ்தாய் வாழ்த்து, தேசியகீதம், அணிவகுப்பு என அதாயி அரபி கல்லூரி மாணவர்கள் நிகழ்விற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர், அனைத்து கட்சி பிரமுகர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த குடியரசுதின விழா … இறுதியாக கல்லூரி முதல்வர் மௌலவி ஹபீபுர் ரஹ்மான் அதாயி அவர்கள் நன்றியுரை வழங்க * இனிதே நிறைவுபெற்றது…
அல்ஹம்துலில்லாஹ்!!