உடல் மொழி
உடல்மொழி என்பது சொல்லிலாத் தகவல்தொடர்பு வகையாகும், இது உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் ஆகியவை உள்ளிட்டதாகும். மனிதர்கள் அது போன்ற சைகைகளை விழிப்புணர்வின்றி அனுப்பவும் புரிந்துகொள்ளவும் செய்கின்றனர்.
மனிதர்களின் தகவல்தொடர்பில் 93% உடல்மொழியும் சொல்லல்லாத கூறுகளுமே பங்களிக்கின்றன, மொத்த தகவல்தொடர்பில் 7% மட்டுமே சொற்களாலான தகவல்தொடர்பாக உள்ளது[1] – இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்களின் மூலமாக விளங்கும் 1960 ஆம் ஆண்டு காலத்திய பணித்திட்டத்தை வழங்கியவரான ஆல்பர்ட் மெஹ்ராபியன், இவையே பண்பு நிர்ணயித்தலில் ஏற்பட்ட பிழை எனக் குறிப்பிட்டுள்ளார் [2] (மெஹ்ராபியன் விதிகளின் தவறான புரிதல் என்பதைக் காண்க). பிறர் “புரிந்துகொள்ளும் அர்த்தங்களில் 60 மற்றும் 70 சதவீதத்திற்கிடையே உள்ளவை சொல்லிலா நடத்தைகளினாலேயே புரிந்துகொள்ளப்படுகின்றன” என உறுதியாகக் கூறுகின்றனர்.[3]
உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அது முரட்டுத்தனம், விழிப்புணர்வு, சலிப்பு, தளர்வான நிலை, இன்பம், கேளிக்கை போன்றவற்றையும் இன்னும் பல மனநிலைகளையும் உணர்த்தலாம்.
அஞ்சுமன் அறிவகம்

Comments
Comments are closed.