Gallery / Events

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
22-01-2024 இரவு 8 மணியளவில் நமது அஞ்சுமன் அறிவகத்திற்கு வருகை தந்த *இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் அவர்களை *நமது அஞ்சுமன் அறிவக நிறுவனர் கொக்கரட்டி அல்ஹாஜ் D.M. ஜபருல்லாஹ் அவர்கள் வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.. இந்நிகழ்வில் இந்திய தேசிய காங்கிரஸின் அய்யம்பேட்டை பேரூர் தலைவர் பசீர் அஹமது அவர்களும் கட்சி பிரதிநிதிகளும், மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், ஜமாஅத் சபை சார்பில் பட்டாணி S.P.J. இல்யாஸ் அவர்களும்,முகம்மது அலி பாப்ஜி அவர்களும், அஞ்சுமன் அறிவக அறங்காவலர்கள் O.P. பசீர் அஹமது அவர்களும், வல்லம் பாசாஜான் அவர்களும் முன்னிலை வகிக்க .. அதாயி மதரஸா பிரின்சிபால் மெளலவி ஹபீப் அதாயி ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த அஞ்சுமன் அறிவக அறங்காவலர்கள் பரிசுக்கார தம்பிதுரை அவர்கள் அறிமுகவுரையும், வாலன் சுலைமான் பாட்சா அவர்கள் கருத்துரையும் வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் மணிசங்கர் அய்யர் அவர்கள் நாட்டின் இன்றைய நிலையையும் காங்கிரஸ் பேரியக்கம் நாட்டுக்கு செய்த தியாகத்தையும் இனி வருங்காலம் இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ .. அவர்களுக்கு அரணாக என்றும் இந்திய தேசிய காங்கிரஸ் செயல்படும் என்பதை மிகத்தெளிவான தமது சிறப்புரையில் எடுத்துரைத்ததுடன். அறிவகத்தை பார்வையிட்டு சிறப்பு விருந்தினர் பதிவேட்டில் நமது அறிவகம் குறித்து சிறப்பான கருத்துகளை பதிவு செய்தார்கள்*.. இறுதியாக அஞ்சுமன் அறிவக அறங்காவலரும் அஞ்சுமன் வளாக செயலாளருமான பட்டாணி S.P.J. முபாரக் அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்வு இனிதாக நிறைவுபெற்றது…
அல்ஹம்துலில்லாஹ் !!!