உணவே மருந்து 

உணவே மருந்து 

நூல் பெயர் : உணவே மருந்து 
மூலநூலாசிரியர் : டாக்டர் எல்.மகாதேவன் 
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
நூல் பிரிவு : GMD-3205

நூல் அறிமுகம்

தினசரி கிடைக்கின்ற உணவுகளையும் அனுபவத்தின் வாயிலாகக் கிடைக்கப்பெற்ற அறிவையும் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது இந்த நூல்.

உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றின் தன்மைகளும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய முறைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

உணவு வகைகளான பலவித சாதம், கூட்டு, பொடி, வற்றல், தொக்கு, ரஸம், தின்பண்டங்கள், கஞ்சி போன்றவற்றுடன் பல்வேறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அடை, தோசை, சப்பாத்தி, டீ, காபி போன்றவை குறித்த பயனுள்ள குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளன.

இந்த உணவு வகைகளின் மருத்துவக் குணங்களும் அவை குணப்படுத்தும் நோய்களும் இதில் விளக்கப்பட்டிருக்கின்றன.

ஆயுர்வவேதத்தில் முறையான கல்வியும், அனுபவமும் கொண்ட மருத்துவக் குழுவினரால் தயாரிக்கப்பட்டது இந்த நூல்.

” இந்நூலின் நோக்கம், நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள், மருந்துகள், பயன்கள் பற்றிப் பேசுவது. உடலில் எந்தக் குறைப்பாட்டுக்கு அல்லது நோய்க்கு என்ன உன்ன வேண்டும் எனும் அரிய தகவல்கள் அடங்கியது” என்கிறார்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.