மகிழ்வுடன் கற்றல் (joyful learning)

மகிழ்வுடன் கற்றல் (joyful learning)

Image may contain: one or more people

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: மகிழ்வுடன் கற்றல் (joyful learning)
ஆசிரியர்: கே. சதாசிவம்
பதிப்பகம் : மேன்மை வெளியீடு
பிரிவு : GE-553
நுால்கள் அறிவாேம்
கால் ஆசிரியர் திரு. கே. சதாசிவம் ஆசிரியர் சமூக சேவையாளர், ஆசிரியர் பயிற்றுனர், மாவட்ட இளைஞர் ஒருங் கிணைட்டார், அறிவாளி, அனைவருக்கும் ஆரம்பக் கல்வி ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட செய்து அவற்றில் முத்திரை பதித்தவர். 1991இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தின் மூலம் முழு எழுத்தறிவு பெற்று மாவட்டமாக மாற்ற அயராது உழைத்தவர், அப்போதைய மாவட்ட ஆட்சியர் திருமதி ஷீலாராணி IAS அவர்களிடம் புதிய கற்போர் “நாங்கள் கையெழுத்து உட்பட போட்டு எழுதல் படிக்க கற்றுக்கொண்டோம்” எங்களுடைய பிள்ளைகளுக்கு அரசு பள்ளியில் தரமாக நல்ல கல்வி கிடைக்க உதவுங்கள் என கேட்டுக் கொண்டதற்கு இவர்கள் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் நிதி உதவிய டன் இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி திட்டமாக திருவரங்க்குளம் ஒன்றியத்தில் (Pilot Project) அனைவருக்கும் ஆரம்பக்கல்வி (EE) என்ற திட்டம் அறிமுகப்படுத்த பட்டது. இதில் குழந்தைகளை மையமாக கொண்ட கல்வி, மகிழ்வுடன் கற்றல் (Joyful Learning) கதை, பாடல், விளையாட்டு, செயல்பாடு என்ற புதிய அணுகுமுறையில் முதற்முதலில் வீரியத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த நல்ல பலன்களை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட தொடக்க கல்வித் திட்டம் (DPEP) அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) போன்ற திட்டங்கள் நாடு முழுதும் அறிமுகப்படுத்தி இன்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. முதன்முதலில் திருவரங்குளம் ஒன்றியத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் ஆரம்பக் கல்வி (UEE) திட்டத்தில் நூல் ஆசிரியர் மாவட்ட ஆய்வு ஒருங்கிணைப்பாளர் களிருப்பது பல்வேறு கருத்து தாள்களை உருவாக்கியுள்ளனர். தற்போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உதவி தொடக்க கல்வி, அலுவலக பணி செய்து வருபவர்.

*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.