தமிழகத்தின் இரவாடிகள்

தமிழகத்தின் இரவாடிகள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : தமிழகத்தின் இரவாடிகள்
ஆசிரியர் : ஏ சண்முகானந்தம்
வெளியீடு : தடாகம்
நூல் பிரிவு : GW-845

நூல் அறிமுகம்

நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களில் 90 விழுக்காடு பகலில் சுறுசுறுப்பாக, உணவுத் தேடுபவைகளாகவும் மீதமுள்ள 10 விழுக்காட்டிற்கும் குறைவானவை இரவில் செயலாற்றுகின்றன. பகலில் இரைதேடும் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவற்றைக் அறிந்துள்ள அளவிற்கு இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் உயிரினங்கள் குறித்து பெரும்பான்மையான மக்கள் அறிந்திருக்கவில்லை.

அந்த வகையில் தமிழகத்திலுள்ள இரவாடிகள் குறித்த அறிமுக நூலாக இந்நூல் விளங்குகிறது. விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட இரவாடி உயிரினங்களின் சுருக்கமான வாழ்வியல் செயல்பாடுகள் முதல் பழந்தமிழர்களின் பதிவுகள் என எண்ணற்ற பல தகவல்களை இந்நூல் தாங்கி நிற்கிறது.

இரவில் சுற்றுத் திரியும் உயிர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.