கோவை கலவரத்தில் எனது சாட்சியம்

கோவை கலவரத்தில் எனது சாட்சியம்

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :கோவை கலவரத்தில் எனது சாட்சியம்
ஆசிரியர் : ஏ.வி அப்துல் நாசா்
பதிப்பகம் :ஆழி நிலையம்
நுால்கள் அறிவாேம்
பிரிவு – GCR

1997-98 களில் நடந்த கோவை வன்முறைகள் குறித்து நேரடி சாட்சியாய் துணிச்சலுடன் பதிவு செய்கிறார் ஏ.வி.அப்துல் நாசர்

முதல் நாள் இரவு கூட்டம் நடக்கிறது. மறுநாள் முந்நூறு போலீசார் மாசாணமுத்து தலைமையில் ஊர்வலம் போகிறார்கள். அவர்களுக்கு பின்னே இந்து முன்னணியினர். அதன் பின்பே கலவரம் தொடங்குகிறது. அழிவு வேலை ஆரம்பிக்கிறது. மிகப் பெரிய துணிக்கடையான ஷோபா டெக்ஸ்டைல்ஸ் ஷட்டரை போலீசே உடைத்து பொருட்களை சூறையாடவும் தீயிட்டு கொளுத்தவும் ஏற்பாடு செய்கிறது.

கலவரத்திற்கு எதிர்வினையாக குண்டு வைக்க அல் உமா திட்டமிடுகிறது. இப்படி ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடமும் தமிழக டி.ஜி.பி யிடமும் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குண்டு வெடிப்பு நடக்கட்டும் என்று காத்திருந்தது போலவே தெரிகிறது என்று குற்றம் சுமத்துகிறார் அப்துல் நாசர்.

ஒரு சமுதாயத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிக்க காவல் துறையும் காவிக் கூட்டமும் கை கோர்த்து சதி செய்தது என்ற அவரது குற்றச்சாட்டு வலிமையானது.

ஆனால் அவர்கள் எல்லாம் இன்று சமுதாயத்தில் கௌரவமிக்கவர்களாக வாழ்கிற போது குற்றத்திற்கு தொடர்பில்லாத பல அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடுவது ஒரு மிகப் பெரிய அநீதி.

அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை,தஞ்சாவூர்
கோவை கலவரத்தில் எனது சாட்சியம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.