காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
ஆசிரியர்      : அருந்ததி ராய் 
பதிப்பகம்    : காலச்சுவடு பதிப்பகம் 
நூல் பிரிவு : GHR – 02 – 3274

நூல் அறிமுகம்

காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுப்படுத்துகின்றன. 2001இல் இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டதைப் பற்றிய மூடுமந்திர விசாரணையை ஆராய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகங்களும் அரசும் கூட்டாகச் செயல்படுவதை அம்பலப்படுத்துகிறது. அப்சல் குரு வாழ்க்கையும் தூக்கிலிடப்பட்டதையும் கண்டிக்கின்றன. நுண்ணிய அரசியல் பார்வையை கூர்மையான நடையில் வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.

இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.