உலகைப் புரட்டிய ஒரு நொடிப்பொறிகள்

உலகைப் புரட்டிய ஒரு நொடிப்பொறிகள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : உலகைப் புரட்டிய ஒரு நொடிப்பொறிகள்
ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : வானவில் பதிப்பகம் 
நூல் பிரிவு : GMA-1467

நூல் அறிமுகம்

நாம் இன்று அனுபவிக்கும் எத்தனையோ வசதிகள் அறிஞர்களின் எண்ண ஓட்டத்தில் தோன்றிய சிந்தனை மின்னல்களால் உதித்த கண்டுபிடிப்புகளால் தான் சாத்தியமாயின.

பெரும்பாலானவர்கள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை அசைபோட மறந்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணப்போவதெல்லாம் ஒரு நொடி சிந்தனை காரணமாக இந்த உலகம் எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என்பது பற்றித்தான்.

அந்த நொடிப் பொழுதில் அவர்கள் அவற்றை அலட்சியம் செய்திருந்தால் நமக்குக் கிடைத்திருக்கும் இத்தனை வசதிகளும் இல்லாமலே போயிருக்கலாம்.

இந்நூலைப் படிக்கும் போது இவ்வளவு சின்ன விசயம் இவ்வளவு சாதித்திருக்கிறதா என்று விழிகளை விரிப்பீர்கள். நமக்குக் கூட இப்படி ஒரு நேரம் தோன்றியதே என்று எண்ணுவீர்கள். அவ்வாறான ஒரு பொறி உங்களுக்குள் தோன்றுகிறதா? அந்தச் சிறு பொறியை ஊதி ஊதி பெரிதாக்கலாம். பெரிதாக்குங்கள். அப்போது உங்களாலும் இந்த உலகைப் புரட்ட முடியும்.

அத்தகைய வெற்றிகரமான நொடிப்பொழுதை கண்டுபிடித்து வாழ்வில் சாதிக்க இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.