உணவும் நல வாழ்வும் 

உணவும் நல வாழ்வும் 

நூல் பெயர் : உணவும் நல வாழ்வும் 
மூலநூலாசிரியர் : மரு.நா.மோகன்தாஸ் எம்.டி.டி.எம்.,
வெளியீடு : பண்பு பதிப்பகம்
நூல் பிரிவு : GMD-5082

நூல் அறிமுகம்

ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் உணவும் ஒன்று. அதைப்போலவே அவனது நலவாழ்வு பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க உறுதி செய்யப்படுகின்றது. எனவே நலவாழ்வும் அதற்கான உணவும் பிரிக்கப்பட முடியாத ஒன்றாகவே விளங்கியது. ஆனால், இன்றைய நமது வாழ்க்கை முறை, வாழ்வியல் சூழல் – தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற காரணங்களால் ‘புரட்டிப் போடப்பட்ட ஆமையைப் போல’ க் கிடக்கின்றது. அதனை மீட்டெடுக்கும் முயற்சியாகவே மருத்துவர் நா.மோகன்தாஸ் தன் மருத்துவப் படிப்பறிவையும் பட்டறிவையும் பதிவு செய்கின்றார்.

18 ரூபாய்கள் கொடுத்து வாங்கி விழுங்குகின்ற ஒரு வைட்டமின் மாத்திரையைக் காட்டிலும் 3 ரூபாய்க்கு 100 கிராம் என்று வாங்கி நாம் அன்றாடம் பயன்படுத்தும் கடுகில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன என்பதனை சொல்லாமல் சொல்கின்றார்.

மீண்டும் நாம் இயற்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற அவரின் விருப்பம் நிறைந்த மக்கள் நல பயணத்தில் பண்பு நூல் வெளியீட்டகமும் உடன் இணைந்து நடைபோடுகின்றது. மருத்துவர் நா.மோகன்தாஸ் அவர்களுக்கும், யாவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.